வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 6 பிப்ரவரி 2018 (17:12 IST)

பக்கோடா விற்று மோடியை கலாய்க்கும் பட்டதாரிகள்..

பிரதமர் மோடி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பேசிய போது, வேலையின்மையை போக்க இளைஞர்கள் வெளியே நின்று பக்கோடா விற்றால் கூட ஒரு நாளுக்கு ரூ.200 சம்பாதிக்கலாம் என கூறினார்.

 
இந்த பேச்சுக்கு மாணவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், ஒரு கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் சிலர் பட்டமளிப்பு ஆடையுடன் கடாயில் எண்னெய் ஊற்றி பக்கோடா செய்து கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
 
இளைஞர்கள் மோடி பக்கோடா, அமித்ஷா பக்கோடா, எடியூரப்பா பக்கோடா, அருண் ஜேட்லி என கூறி பாஜக கட்சி தொண்டர்களை கலாய்த்து வருகின்றனர். 

ஏற்கனவே பெங்களூரு நகரில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்திற்கு மோடி பங்கேற்க சென்றபோது, இளைஞர்கள் பலர் பட்டமளிப்பு ஆடையுடன், பக்கோடா விற்பனை செய்து மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்க காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.