1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (08:25 IST)

ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை செப். முதல் இந்தியாவில் தயாரிக்க ஏற்பாடு

இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி தயாரிப்பு செப்டம்பர் மாதத்தில் இந்திவாவில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில் இவை தவிர ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கும் இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த தடுப்பூசியை தயாரிக்க டாக்டர் ரெட்டிஸ் லேப் அனுமதி பெற்றுள்ளது.
 
இந்நிலையில் இதன் தயாரிப்பு செப்டம்பர் மாதத்தில் இந்திவாவில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஸ்புட்னிக் வி தடுப்பூசி அக்டோபரில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்தியாவில் சுமார் 80 நகரங்களுக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசி அனுப்பி வைக்கப்படுவதாகவும் நாடு முழுவதும் உள்ள சுமார் 300 மருத்துவமனைகளுக்கு தொடர்பு கொண்டு விநியோகித்து வருவதாகவும் டாக்டர் ரெட்டிஸ் லேப் நிறுவனம் தெரிவித்துள்ளது.