1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 3 மே 2024 (10:54 IST)

பிரஜ்வால் ரேவண்ணாவை கைது செய்ய ஜெர்மனி செல்லும் சிறப்புப் புலனாய்வுக் குழு.. பரபரப்பு தகவல்..!

Prajwal Revanna
கர்நாடகாவில் பாலியல் புகாரில் சிக்கி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவை கைது செய்ய சிறப்புப் புலனாய்வுக் குழு ஜெர்மனி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ஜாமினில் வெளியே வரமுடியாத பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் பிரஜ்வால் கைது செய்யப்படுவது உறுதி என்றும், ஜெர்மனி செல்லும் சிறப்புப் புலனாய்வுக் குழு அவரை கைது செய்து இந்தியாவுக்கு அழைத்து வரும் என்றும் கூறப்படுகிறது.
 
முன்னதாக ரேவண்ணாவால் பாதிக்கப்பட்ட பெண் மாஜிஸ்திரேட் முன் வாக்குமூலம் அளித்ததை அடுத்து  எஃப்.ஐ.ஆரில் கூடுதல் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளதால் இந்த வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
ஆபாச வீடியோக்கள் தொடர்பான புகாரில் பிரஜ்வல் ரேவண்ணா மீது சிறப்பு தணிக்கை குழு வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் பாலியல் வீடியோ விவகாரம் வெளியானவுடன்  பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனி தப்பி சென்றுவிட்டார்.  இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா விசாவை ரத்து செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன,.
 
Edited by Mahendran