சனி, 28 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 24 நவம்பர் 2021 (08:47 IST)

சீக்கியர்கள் புகார் எதிரொலி: கங்கனா ரனாவத் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்த போலீஸ்!

சீக்கியர்கள் அளித்த புகாரின் காரணமாக பிரபல நடிகை கங்கனா ரனாவத் மீது காவல்துறையினர் எப்ஐஆர் பதிவு செய்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
தங்களது உணர்வுகளை புண்படுத்தியதாக பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மீது சீக்கிய மதத் தலைவர்கள் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் மும்பை போலீசார் கங்கனா ரனாவத் மீது எப்ஐஆர் பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்படும் என பிரதமர் மோடி அறிவித்த இருந்தபோது விவசாயிகளை பயங்கரவாதிகள் ஒப்பிடும் சீக்கியர்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் கங்கனா பதிவு செய்திருந்தார் என்பதும் இந்த பதிவை அடுத்து தற்போது சீக்கியர்கள் புகார் அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.