1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. SI rape woman constable in telungana state

துப்பாக்கி முனையில் பெண் காவலரை பாலியல் வன்கொடுமை செய்த எஸ்.ஐ; அதிர்ச்சி சம்பவம்!

துப்பாக்கி
தெலுங்கானா மாநிலத்தில் துப்பாக்கி முனையில் பெண் காவலரை எஸ்ஐ ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள காளேஸ்வரம் என்ற காவல் நிலையத்தில் பவானிசென்  காவல்துறை எஸ்.ஐ. ஆக பணிபுரிந்தார். அவர் அதே காவல் நிலையத்தில் பணிபுரிந்த பெண் தலைமை காவலரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 
 துப்பாக்கி முனையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுவதோடு இதை வெளியில் கூறினால் கடுமையாக விளைவுகள் சந்திக்க நேரிடும் என எச்சரித்து இருந்ததாகவும் தெரிகிறது.
 
இதனை அடுத்து பவானிசென் குற்றம் உறுதியானதால் அவர் நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
ஏற்கனவே அவர் மூன்று பெண் காவலர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் இருந்த நிலையில் தற்போது அவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: நெல்லை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!