1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 22 ஜூலை 2022 (09:46 IST)

இந்த வாரம் முழுவதும் பங்குச்சந்தை ஏற்றம்: இன்றும் 200 புள்ளிகள் உயர்வு!

Share
பங்குச்சந்தை இந்த வாரம் திங்கட்கிழமை முதலே உயர்ந்து கொண்டு வந்த நிலையில் இன்றும் உயர்ந்து உள்ளதால் முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்த வாரம் திங்கள் முதல் வியாழன் வரை நான்கு நாட்களும் பங்குச் சந்தை நிப்டி, சென்செக்ஸ் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் ஏராளமான லாபத்தை பெற்று உள்ளனர் 
இந்த நிலையில் இன்று காலை 9 மணிக்கு பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய உடன் சென்செக்ஸ் சுமார் 200 புள்ளிகள் வரை உயர்ந்து 55,900 என்ற புள்ளியில் வர்த்தகமாகி வருகிறது
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 50  புள்ளிகள் உயர்ந்து 14660 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
பங்குச் சந்தை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தொடர் வீழ்ச்சி அடைந்த நிலையில் தற்போது தொடர் ஏற்றம் கண்டு வருவது முதலீட்டாளர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது