1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 19 செப்டம்பர் 2022 (18:29 IST)

சோனியா காந்தியை சந்தித்த சசிதருர்: காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறாரா?

Sasitharoor
காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் திடீரென சசிதரூர் எம்பி சோனியா காந்தியை சந்தித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்கள் வரும் 24-ஆம் தேதி முதல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும் தேவைப்பட்டால் தேர்தலை அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறும் என்றும் பதிவான வாக்குகள் அக்டோபர் 19ஆம் தேதி எண்ணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது
 
இந்த நிலையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய மூவரும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிட வில்லை என்றால் தான் போட்டியிட விரும்புவதாக சமீபத்தில் சசிதரூர் தெரிவித்திருந்தார்
 
இந்த நிலையில் சற்று முன் அவர் சோனியா காந்தியை திடீரென சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.