1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 3 நவம்பர் 2021 (10:35 IST)

மீண்டும் திறக்கப்படும் சபரிமலை – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் திறக்கப்படும் நிலையில் பக்தர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் 15ம் தேதி முதல் மீண்டும் நடை திறக்கப்படுகிறது. 16ம் தேதி முதல் வழக்கமான பூஜைகள் நடைபெறும் நிலையில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் பெற்ற கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்ற சான்றிதழை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.