1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 30 அக்டோபர் 2021 (10:29 IST)

ஆர்யன் கானுக்கு ஷூரிட்டி அளித்த முன்னாள் பாலிவுட் நடிகை!

நடிகை ஜூஹி சாவ்லா ஆர்யன் கானின் பிணைக்கான உத்தரவாதத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்.

போதை பொருள் கடத்தல் வழக்கில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் கடந்த 2 ஆம் தேதி கைது செய்யப்பட்ட விவகாரம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆர்யன் கான் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ஜாமீன் மனு கோரப்பட்டு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. அதையடுத்து இரு தினங்களுக்கு முன் மீண்டும் ஜாமீன் மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில் அதை ஏற்றுக் கொண்டுள்ள மும்பை உயர்நீதிமன்றம் ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் பிணைக்காக ஆர்யன் கான் ஒரு லட்சம் ரூபாய் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும். அப்படி அவர் செலுத்தாத பட்சத்தில் அதற்கான பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாக பாலிவுட்டின் முன்னணி நடிகையான ஜூஹி சாவ்லா பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். இவர் ஷாருக்கானின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர்.