1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 2 நவம்பர் 2021 (17:30 IST)

அவங்களுக்கு அன்பு காட்ட யாருமில்ல.. நீங்க அணியை காப்பாத்துங்க! – ராகுல் காந்தி அறிவுறுத்தல்!

இந்திய அணி உலகக்கோப்பை போட்டியில் மோசமாக விளையாடியது குறித்து பலரும் விமர்சித்து வரும் நிலையில் கோலிக்கு ஆதரவாக ராகுல்காந்தி பேசியுள்ளார்.

உலககோப்பை டி20 போட்டிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் அதில் பங்கேற்ற இந்திய அணி தொடர்ந்து சொதப்புவது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் இந்திய அணி குறித்து பலரும் காட்டமான விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் கோலிக்கு ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி “மக்கள் வெறுப்பால் நிரப்பப்படுகிறார்கள், ஏனென்றால் யாரும் அவர்களுக்கு எந்த அன்பையும் கொடுக்கவில்லை. அவர்களை மன்னியுங்கள். அணியைப் பாதுகாக்கவும்” என்று பதிவிட்டுள்ளார்.