திங்கள், 23 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 29 டிசம்பர் 2019 (19:00 IST)

பிரியங்கா காந்திக்கு ரூ.6100 அபராதம்: கட்டுவாரா? மறுப்பாரா?

உத்தர பிரதேசத்தில் கைதான முன்னாள் போலீஸ் அதிகாரியை சந்திக்க சென்ற பிரியங்கா காந்தியை போலீசார் தடுத்ததால் அவர் திடீரென இருசக்கர வாகனத்தில் சென்றார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
 
இந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பிரியங்கா காந்தியும், அந்த வாகனத்தை ஓட்டி சென்ற பிரியங்கா காந்தியும் ஹெல்மெட் போடவில்லை என்ற குற்றச்சாட்டும் சமூக வலைத்தளங்களில் டிரெண்டானது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் லக்னோவில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணித்த பிரியங்கா காந்திக்கு அபராதம்  விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஹெல்மெட் அணியாமல் பயணித்த பிரியங்கா காந்திக்கு ரூ.6,100 அபராதம் விதித்தது லக்னோ காவல்துறை தெரிவித்துள்ளதால், இந்த அபராதத்தை பிரியங்கா கட்டுவாரா? அல்லது கட்ட மறுப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்