தொடர்புடைய செய்திகள்
- குடியுரிமை சட்டத்தை ஆதரித்த பெண் எம்.எல்.ஏ ... கட்சியிலிருந்து நீக்கம் !
- மாடு இளைச்சாலும் கொம்பு இளைக்கல: சிதம்பரத்தை சீண்டும் எச்.ராஜா!
- குடியுரிமை சட்ட திருத்தம் ஏழைகளின் மீதான தாக்குதல்... ராகுல் காந்தி
- நான் உயிருடன் இருக்கும் வரை காவல் தடுப்பு மையங்கள் அமைக்கப்படாது - மம்தா பானர்ஜி
- அரியானாவிலும் ஆட்டம் காணும் பாஜக ஆட்சி: மேலும் ஒரு மாநிலத்தை இழக்கின்றதா?
"உத்தர பிரதேச காவலர்கள் என் கழுத்தைப் பிடித்து திருகினர்"
லக்னோவில் பெண் காவல்துறை அதிகாரி, தன்னுடைய கழுத்தைப் பிடித்துத் திருகியதாகக் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகப் போராடிய ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியைக் கைது செய்ததற்காக அவரை சந்திக்க அவர் வீட்டுக்குச் சென்ற போது இவ்வாறு நடந்ததாகக் கூறினார் பிரியங்கா காந்தி.
76 வயதாகும் ஓய்வுபெற்ற அதிகாரி எஸ். ஆர். தாராபுரி இந்த வாரத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகப் போராடியதால் கைது செய்யப்பட்டார். அவரை சந்திக்க அவர் வீட்டுக்குச் செல்வதற்காக முதலில் இருசக்கர மோட்டார் வாகனத்தின் பின்னே அமர்ந்தும் பின்னர் நடந்தும் சென்றார் பிரியங்கா காந்தி. அவருடன் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களும் இருந்தனர்.
அடுத்த கட்டுரையில்