வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 10 ஜூன் 2021 (17:29 IST)

ரெட் அலார்ட் எச்சரிக்கை- வானிலை ஆய்வு மையம்

மத்திய மற்றும் கிழக்கு இந்திய பகுதிகளில் தென்மேற்குப் பருவ மழை தீவிரம் அடையவுள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமீபத்தில் யாஷ் புயல் மேற்குவங்கம், உள்ளிட வட மாநிலங்களில் யாஷ் புயல் தாண்டவம் ஆடியது. இதனால் இம்மாநிலங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், ஒடிஷா, சட்டீஸ்கர் உள்ளிட்ட கடற்கரை ஓரப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைய உள்ளதால், மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு இந்திய பகுதிகளில் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.