1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 28 பிப்ரவரி 2022 (22:07 IST)

உக்ரைனுக்கு உதவ தயார் - மத்திய அரசு அறிவிப்பு

உக்ரைன் – ரஷ்யா ஆகிய இரு  நாடுகளுக்கு இடையே தொடர்ந்து இன்று 5 வது நாளாகப் போர் நடந்துவரும் நிலையில், பெரும் பதற்றம்  நீடிக்கிறது.

வலிமையில் குன்றியுள்ள உக்ரைனுக்கு நேட்டோ நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதி உதவிகள் செய்து வருகிறது.

இ ந் நிலையில், உக்ரைனுக்கு மனிதாபிமான அடிப்படையில்   தேவையான உதவிகள் செய்ய தயார் எனவும்,குறிப்பாக மருத்துவ பொருட்கள் அந்நாட்டிற்கு அனுப்பப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது.