தொடர்புடைய செய்திகள்
- என் கட்சியில் வந்து சேர்ந்து கொள்ளுங்கள்- தெலுங்கு தேச எம்.எல்.ஏக்களுக்கு ஜெகன் மோகன் நேரடி அழைப்பு
- அப்பாடா டாஸ் போட்டாச்சு… விட்டுக்கொடுத்த மழை … - தொடங்கியது இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் போட்டி !
- #ShameOnICC: சிக்கி சின்னாபின்னமாகும் ஐசிசி! வேற லெவல் மீம்ஸ்...
- இன்றைய ஆட்ட நாயகனும் மழைதானா?
- சென்னைவாசிகளே என்ஜாய்... இரண்டு நாளைக்கு நல்ல மழை இருக்காம்...!!
ஆந்திரா, தெலுங்கானாவில் பருவ மழை துவக்கம்:வானிலை ஆய்வு மையம்
இன்னும் சில தினங்களில் ஆந்திரா, தெலுங்கானா பகுதிகளில் பருவ மழை துவங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம், ஜூன் 12 ஆம் தேதியே பருவ மழை துவங்கும் என அறிவித்திருந்த நிலையில், தற்போது ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வரும் 16-ஆம் தேதிக்கு பிறகு பருவமழை துவங்கும் என அறிவித்துள்ளது.
வாயு புயல் ஈரப்பதத்தை இழுத்துச்சென்று விட்டதால், மழை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டதாகத் தெரியவருகிறது.
கடலோர ஆந்திரா பகுதிகளில் இன்று பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
