1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 24 மார்ச் 2023 (19:40 IST)

நாட்டுக்காக எந்த விலையையும் கொடுக்க தயார்: ராகுல் காந்தி டுவிட்..!

நாட்டுக்காக எந்த விலையும் கொடுக்க தயார் என காங்கிரஸ் எம்பியாக இருந்த ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்பி ஆக இருந்த ராகுல் காந்தி பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனை அடுத்து பாஜக தொடர்ந்த வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது
 
இதனை அடுத்து அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில் ராகுல் காந்தி இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 
 
அதில் நாட்டுக்காக எந்த விலையும் கொடுக்க தயார் என்றும் இந்தியாவின் குரலுக்காக நான் தொடர்ந்து போராடுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். அவரது இந்த டுவிட் வைரலாகி வருகிறது
 
Edited by Siva