ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (17:49 IST)

தோல்வியை எதிர்கொள்ள முடியாத போது ரெய்டு நடத்துவது பாஜகவின் வழிமுறை… ராகுல்காந்தி டிவீட்!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்குப்பதிவுக்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ளது என்பதும் தேர்தல் பிரச்சார முடிய இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மத்தியில் உள்ள பாஜக அதிரடியாக எதிர்க் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் பிரமுகர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை என்ற பெயரில் பயமுறுத்தி வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது .

இன்று காலை திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டிலும் திமுக வேட்பாளர்கள் மோகன் மற்றும் செந்தில்பாலாஜி வீடுகளிலும் வருமானவரித்துறை சோதனை நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல்காந்தி ‘தோல்வியை எதிர்கொள்ள முடியாத போதெல்லாம் பாஜக இதுபோன்ற ரெய்ட்களை நடத்தும் வழிமுறைக் கொண்டது’ எனக் கூறியுள்ளார்.