1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (20:07 IST)

வாய்ப்பு கிடைத்தால் தாஜ்மஹாலையும் விற்றுவிடுவார்கள்; ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ராகுல் காந்தி

வாய்ப்பு கிடைத்தால் தாஜ்மஹாலையும் செங்கோட்டையையும் மத்திய அரசு விற்றுவிடும் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

ஏர் இந்தியா நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும் அதனை தனியாருக்கு விற்றுவிட வேண்டும் எனவும் மத்திய அரசு கூறிவருகிறது. மேலும் ரயில்வே, இந்தியன் ஆயில் ஆகிய அரசு நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்படும் எனவும் கூறிவருகிறது.

இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, “வாய்ப்பு கிடைத்தால் செங்கோட்டையையும் தாஜ்மஹாலையும் விற்றுவிடுவார்கள்” என குற்றம் சாட்டியுள்ளார்.