வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 16 பிப்ரவரி 2019 (09:14 IST)

சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் சென்ற பேருந்து மீது தீவிரவாதியின் கார் மோதிய சிசிடிவி காட்சி

நேற்று முன் தினம் காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா பகுதியில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் சென்ற பேருந்து மீது திடீரென எதிரே வந்த பயங்கர சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளுடன் வந்த கார் மோதியது., இந்த தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப்  வீரர்கள் 44 பேர் பலியாகினர். மேலும் சிலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதலால் நாடே அதிர்ச்சி அடைந்து பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளதோடு, பழிக்கு பழி வாங்க வேண்டும் என்ற குரல் நாடு முழுவதும் ஓங்கி ஒலித்து வருகின்றது. மேலும் நாட்டின் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை செய்த அமைச்சரவை பதில் தாக்குதலுக்கு ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் சென்ற பேருந்து மீது வெடிகுண்டுகளுடன் கூடிய கார் மோதிய சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. கார் மோதிய வேகத்தில் மிகப்பெரிய குண்டுவெடிப்பு நடந்த அதிர்ச்சி காட்சியும் அந்த வீடியோவில் உள்ளது. இந்த வீடியோ தற்போது அனைத்து ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் மிக வேகமாக பரவி வருகிறது