1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (20:34 IST)

கிருஷ்ண ஜெயந்தி திருநாள்: ஜனாதிபதி, துணை ஜனாதிபதி வாழ்த்து!

Krishna Jayanti
நாளை நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட இருக்கும் நிலையில் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி எனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் இது குறித்து தற்போது பார்ப்போம்
 
கிருஷ்ண ஜெயந்திக்கு ஜனாதிபதி திரெளபதி முர்முவின் வாழ்த்து:  "இந்த மங்களகரமான தருணத்தில் எனது நல்வாழ்த்துக்களை இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் அனைத்து சக குடிமக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். கிருஷ்ண பகவானின் வாழ்க்கையும், போதனைகளும் நல்வாழ்வு மற்றும் நல்லொழுக்கத்தை உள்ளடக்கியது. அவர் "சுயநலமில்லாத கடமை " என்ற கருத்தை பரப்பினார். 'தர்ம' வழியின் மூலம் இறுதி நிலையை அடைவது குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தினார். இந்த ஜென்மாஷ்டமி பண்டிகை நம் எண்ணம், வார்த்தைகள் மற்றும் செயல்பாடு நல்லொழுக்க பாதையில் செல்ல நம்மை ஊக்குவிக்கட்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்
 
 
துணை கிருஷ்ண ஜெயந்திக்கு ஜனாதிபதி ஜக்திப் தங்கரின்ன் வாழ்த்து: ஜென்மாஷ்டமியின் புனிதமான தருணத்தில், நம் நாட்டு மக்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். பகவான் கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடும் ஜென்மாஷ்டமி, பக்தர்களுக்கு ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தது. ஜென்மாஷ்டமி, தர்மத்தின் மீது தர்மத்தின் வெற்றி என்ற நமது நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. பகவான் கிருஷ்ணர் தெய்வீக அன்பு, உயர்ந்த அழகு மற்றும் நித்திய மகிழ்ச்சியின் உருவகம். பகவத் கீதையில் அவரது காலத்தால் அழியாத போதனைகள் மனித குலத்திற்கு உத்வேகம் அளிக்கும் ஒரு சிறந்த ஆதாரம். இந்த ஜென்மாஷ்டமி நம் வாழ்வில் அமைதியையும், நல்லிணக்கத்தையும், மகிழ்ச்சியையும் தரட்டும்.