வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (16:27 IST)

துப்பாக்கியால் சுட்டவர்களை மக்கள் துடைப்பத்தால் அடித்துள்ளனர் – பாஜகவை கேலி செய்த பிரகாஷ்ராஜ் !

பிரகாஷ் ராஜ்

இன்று அறிவிக்கப்பட்டுக் கொண்டு இருக்கும் டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்க இருக்கிறது.

இன்று காலைமுதல் அறிவிக்கப்பட்டு வரும் டெல்லி தேர்தலுக்கான முடிவுகளில் ஆம் ஆத்மி கட்சி 50க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் வந்து பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. பாஜக 18 தொகுதிகளில் முன்னிலை பெற்று இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. மக்களைத் தேர்தலுக்குப் பின் நடந்துள்ள அனைத்து மாநிலத் தேர்தல்களிலும் பாஜக தோல்வி அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாஜகவின் தோல்வியை நடிகர் பிரகாஷ்ராஜ் தன்னுடைய டிவிட்டரில் ‘குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக போராடிய மக்களை துப்பாக்கியை விட்டு சுடச் சொன்னவர்களை இப்போது மக்கள் துடைப்பத்தால் (ஆம் ஆத்மி கட்சியின் சின்னம்) அடித்து விரட்டி இருக்கிறார்கள்.’ எனப் பதிவிட்டுள்ளார். கடந்த காலங்களில் பிரகாஷ் ராஜ் பாஜகவைக் கடுமையாக விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.