வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 3 ஜனவரி 2021 (13:26 IST)

இந்தியாவில் இது ஒரு திருப்புமுனை! – கொரோனா தடுப்பூசிக்கு பிரதமர் மோடி பாராட்டு!

இந்தியாவில் கொரோனாவிற்கு அவசரகால தடுப்பூசியாக கோவாக்சின், கோவிஷீல்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு கோடியை தாண்டிவிட்ட நிலையில் கொரோனாவை தடுக்க அவசர கால தடுப்பூசியாக கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகியவற்றை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டர் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி ”கொரோனா இல்லாத இந்தியாவை உருவாக்குவதில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் முக்கிய திருப்பு முனையாக அமையும். தடுப்பூசி கண்டுபிடிக்க கடினமான உழைப்பில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர்களுக்கு வாழ்த்துகள்” என கூறியுள்ளார்.