தொடர்புடைய செய்திகள்
- மருத்துவ உயர்கல்வியில் இட ஒதுக்கீடு… இந்த ஆண்டே வேண்டும் – மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!
- சீனாவுடனான போருக்கு மோடி தேதி குறித்துவிட்டார்… பாஜக தலைவர் பேச்சால் சர்ச்சை!
- ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு இம்ரான்கான் கடிதம்: முக்கிய கோரிக்கை
- சலூன் கடைகாரரிடம் தமிழில் பேசிய மோடி! – நூலகம் அமைத்ததற்கு வாழ்த்து!
- நேபாள பிரதமரை 'ரகசியமாக' சந்தித்த இந்திய உளவு பிரிவின் தலைவர் - வெடித்தது புதிய சர்ச்சை
ஊழலுக்கு எதிராக எந்தவிதமான சமரசமும் இல்லை: பிரதமர் மோடி
ஊழலுக்கு எதிராக எந்தவிதமான சமரசமும் இன்றி இந்த அரசு முன்னேறிக் கொண்டிருக்கிறது என பிரதமர் மோடி லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு குறித்த தேசிய மாநாடு ஒன்றில் கலந்து கொண்டபோது தெரிவித்தார்
ஆண்டுதோறும் அக். 27 முதல் நவ. 2 வரை கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து மத்திய புலனாய்வுப் பிரிவு ஏற்பாட்டில் லஞ்ச ஒழிப்பு - ஊழல் தடுப்பு குறித்த தேசிய மாநாடு காணொலி மூலம் நடைபெறுகிறது
விழிப்பான இந்தியா - வளமான இந்தியா' என்ற காணொலி நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பிரதமர் பேசியதாவது: ஊழலுக்கு எதிராக முறையான தணிக்கை பயிற்சி பரிசோதனை மற்றும் திறன் போன்றவற்றை அமைக்க வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது. ஊழலுக்கு எதிராக எந்தவிதமான சமரசமும் இன்றி இந்த அரசு முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஊழல் அந்நிய செலாவணி முறைகேடு பொருளாதார குற்றங்கள் ஆகும். போதைப்பொருள் கடத்தல் அமைப்பு இவை எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது.
நமது நிர்வாக நடைமுறை வெளிப்படையாகவும் மக்களுக்குப் பதிலளிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். ஊழல் என்பது வளர்ச்சிக்கு தடையாக இருப்பது மட்டுமின்றி சமூக சமநிலையையும் வெகுவாக பாதிக்கிறது’ என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
அடுத்த கட்டுரையில்
