1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. PM Modi speak with peoples today

இன்று காலை 9 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் உரை! – என்ன பேசப்போகிறார்?

India
பிரதமர் மோடி இன்று காலை 9 மணியளவில் நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு இருந்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்துவது மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மூலம் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 100 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று காலை 9 மணிக்கு பிரதமர் நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. பிரதமர் மோடி இந்தியாவில் கொரோனா நிலவரம் மற்றும் செயல்பாடுகள் குறித்து அதில் பேசலாம் என்றும், மேலும் வேறு சில புதிய அறிவிப்புகளும் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
தமிழகம் முழுவதும் இன்று கார்த்திகை தீப பண்டிகை! – களைகட்டும் அகல் விளக்குகள் விற்பனை!