1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 25 மார்ச் 2021 (16:56 IST)

ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்ட கன்னியாஸ்திரிகள் – முதல்வர் கண்டனம்!

உத்தர பிரதேசத்தில் ரயிலில் இருந்து கன்னியாஸ்திரிகள் இறக்கிவிடப்பட்ட சம்பவத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் ஜான்சி ரயிலில் மதமாற்றம் செய்வதாக சொல்லி இரண்டு கன்னியாஸ்திரிகள் மற்றும் அவர்களுடன் இருந்த இரண்டு பெண்களை அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் இறக்கிவிட்டுள்ளனர். ஆனால் அவர்களின் குற்றச்சாட்டு பொய் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து சம்பவம் தொடர்பாக பலரும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் இது சம்மந்தமாக தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.