1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 18 செப்டம்பர் 2023 (12:09 IST)

மக்களவை தொடங்கிய சில நிமிடங்களில் எதிர்க்கட்சிகள் முழக்கம்: சபாநாயகர் அதிர்ச்சி..!

மக்களவை சிறப்பு கூட்டத்தொடர் என்று தொடங்கிய நிலையில் கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் எதிர்க்கட்சி எம்பிக்கள்  முழக்கமிட்டதால் சபாநாயகர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
 
 மக்களவை சிறப்பு கூட்டத்தொடர் ஐந்து நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று தொடங்கியது. நாளை முதல் பாராளுமன்றம் புதிய கட்டிடத்தில் தொடங்கும் என்றும் கூறப்பட்டது.
 
இந்த நிலையில் மக்களவைத் தொடங்கிய சில நிமிடங்களில் எதிர்க்கட்சி எம்பிக்கள் சபாநாயகரை நோக்கி முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சபாநாயகர் எம்பிக்களை அமைதியாக அமருமாறு கேட்டுக் கொண்டார். 
 
ஒரே நாடு ஒரே தேர்தல்ள்பட பல்வேறு கோரிக்கைகளை வைத்து எதிர்க்கட்சிகள் சபாநாயகரை நோக்கி முழக்கம்பட்டு வருகின்றனர்.  இந்த கூட்டத்தொடரில்  ஒரே நாடு ஒரே தேர்தல் கூட்டத்தொடர் குறித்த மசோதா நிறைவேறும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva