தொடர்புடைய செய்திகள்
- துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கியவரை காப்பாற்றும் நாய்? – உண்மை என்ன #FactCheck!
- துருக்கி, சிரியா நிலநடுக்கம்: பிறந்த குழந்தை இடிபாடுகளிலிருந்து மீட்பு - தாய் தந்தை இறந்த சோகம்
- இந்தியாவின் 8 மாநிலங்களில் நிலநடுக்கங்கள் ஏற்படும் ஆபத்து: ஆய்வு அறிக்கையில் தகவல்!
- துருக்கி பூகம்பம்: தொப்புள் கொடியுடன் பச்சிளங்குழந்தை உயிருடன் மீட்பு..!
- 67.65 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
இந்தியாவின் நிவாரண பொருட்களின் விமானத்திற்கு பாகிஸ்தான் அனுமதி மறுப்பா?
துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் ஏற்பட்ட பயங்கர பூகம்பம் காரணமாக ஏராளமான சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் உலக நாடுகள் துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
அந்த வகையில் இந்தியா நிவாரண பொருட்களுடன் கூடிய விமானத்தை துருக்கி நாட்டிற்கு அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் துருக்கிக்கு நிவாரண பொருட்களை ஏற்றி சென்ற இந்திய விமானப்படை விமானங்களை தங்கள் வான் இல்லையில் பறக்க பாகிஸ்தான் அனுமதி மறுத்து விட்டதாக தகவல் சமூக வலைதளங்களில் பரவியது
ஆனால் இந்த தகவலை இந்திய விமானப்படை மறுத்துள்ளது. இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தான் வழியாக செல்லவில்லை என்றும் குஜராத் மேற்கு ஆசியா, ஐரோப்பிய வழியாகத்தான் துருக்கி சென்றது என்றும் பாகிஸ்தான் விண்வெளியை இந்திய விமானப்படை பயன்படுத்தவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
