வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 7 செப்டம்பர் 2019 (17:14 IST)

ஜனாதிபதி பறப்பதற்கு பாகிஸ்தான் மறுப்பு..

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்துவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

வரும் திங்கட்கிழமை ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் சுலோவேனியா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சுற்றுப்பயணம் செல்லவுள்ளார்.

இந்நிலையில் இந்திய ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணத்துக்கு பாகிஸ்தான் நாட்டின் வான்வெளியை பயன்படுத்த பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் குரேஷி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் பிரதமர் மோடி, கிர்கிஸ்தான் நாட்டிற்கு செல்லும்போது, பாகிஸ்தான் தனது வான்வெளியை மூடி வைத்தது குறிப்பிடத்தக்கது.