1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Odisha train accident,3 senior engineers arrested

ஒடிஷா ரயில் விபத்து: மூத்த பொறியாளர்கள் 3 பேர் கைது!

Bengaluru-Howrah Super Fast Express
ஒடிஷா ரயில் விபத்து தொடர்பாக இன்று ரயில்வே மூத்த பொறியாளர்கள்  3 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.

ஒடிஷாவில் கடந்த 2 ஆம் தேதி இரவில் பெங்களூரு- ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஷாலிமார்- சென்டிரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், மற்றும் சரக்கு ரயில் 3 ரயில்களும் விபத்தில் சிக்கியது. இதில்,  293 பேர் உயிரிழந்தனர். 1000 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து மனிதத் தவறால் ஏற்பட்டதாகக் கூறி ரயில்வே பாதுகாப்பு ஆணையர் இந்திய ரயில்வே அமைச்சகத்திடம் அறிக்கை சமர்ப்பித்தார்.

இந்த ரயில் விபத்து இந்தியாவை உலுக்கிய நிலையில், இதுகுறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த  நிலையில், இன்று ரயில்வே மூத்த பொறியாளர்கள்  3 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.

அருண்குமார்  மஹந்தா, முகம்மது அமீர்கான், பப்பு குமார் ஆகிய மூன்று பேரை ஆதாரங்களை அழித்தல், உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளனர்.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
காணாமல் போன இளைஞர் தாயாரின் செக்ஸ் அடிமையாக இருந்ததாக தகவல்