1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 30 ஏப்ரல் 2024 (12:13 IST)

ஆபாச வீடியோ விவகாரம்.! ரேவண்ணாவுக்கு எதிரான விசாரணைக்கு ஆதரவு..! அமித்ஷா...

ஜேடிஎஸ் எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பான விசாரணைக்கு தாங்கள் ஆதரவளிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
 
அசாம் மாநிலம் குவாஹாட்டியில் செய்தியாளரிடம் பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,  பெண்களுக்கு எதிரான குற்றங்களை பாஜக கடுமையாக எதிர்க்கும் என்றார். இதில் காங்கிரஸ் கட்சியிடம் நான் கேட்க விரும்புவது அங்கு நடைபெறுவது யாருடைய ஆட்சி என்றும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி தானே, அவர்கள் ஏன் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? என்றும் கேள்வி எழுப்பினார்.
 
பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ விவகாரத்தில் மாநில அரசான காங்கிரஸ் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமித்ஷா தெரிவித்தார். பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக நடத்தப்படும் எந்த விசாரணைக்கும் தாங்கள் ஆதரவளிப்பதாக தெரிவித்த அவர்,  எங்களின் கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளமும் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுத்திருப்பதை சுட்டிக்காட்டினார். அநேகமாக இன்று அக்கட்சியின் குழு கூடி அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என்றார்.
 
பாஜக 400 இடங்களை வென்றால் இடஒதுகீட்டை நிறுத்திவிடும் என்று காங்கிரஸ் கட்சி பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறது என்று அமித்ஷா குற்றம் சாட்டினார். இவை அடிப்படை ஆதாரமற்ற தகவல் என்றும் உண்மைக்கு புறம்பான பிரச்சாரம் என்றும் அவர் கூறினார்.  பாஜக எப்போதும் எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி இடஒதுக்கீட்டை ஆதரிக்கும் என தெரிவித்த அவர். மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கே நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்று கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் விரக்தியின் வெளிப்பாடாக என்னையும் பல பாஜக தலைவர்களையும் கொண்ட போலி வீடியோக்களை பரப்பி வருகிறது என்றும் போலியான வீடியோக்களை பரப்பி மக்களின் ஆதரவைப் பெறும் இந்த முயற்சி கண்டிக்கத்தக்கது என்றும் அமித்ஷா தெரிவித்தார்.

 
உத்தரபிரதேசத்தின் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி போட்டியிடுவார்களா எனத் தெரியாது என்றும் ஆனால், அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட தன்னம்பிக்கை இல்லை என்றும் அவர் கூறினார்.  தங்களின் பாரம்பரிய தொகுதிகளை விட்டு அவர்கள் ஓடிவிட்டனர் என்று அமித்ஷா விமர்சித்தார்.