1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 29 ஏப்ரல் 2024 (16:40 IST)

கொடிகட்டி பறக்கும் போதை பொருள் கடத்தல்..! 173 கிலோ போதைப்பொருள் பறிமுதல்..!!

Drugs Arrest
குஜராத் கடற்பகுதியில் மீண்டும் 173 கிலோ எடையுள்ள போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
குஜராத்தில் அரபிக் கடல் பகுதியில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக, இந்திய கடலோர காவல் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து, குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மற்றும் தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் ஆகியோருடன் இணைந்து அரபிக் கடலில் இந்திய கடலோர காவல் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
 
அப்போது, சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த படகை அதிகாரிகள் சுற்றி வளைத்து சோதனை செய்தனர். அதில், 173 கிலோ போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்து அதிகாரிகள், போதைப் பொருட்களை கடத்தி வந்த இந்திய மீன்பிடி படகிலிருந்த 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
முன்னதாக நேற்று  அரபிக் கடலில் நடத்தப்பட்ட சோதனையில் பாகிஸ்தான் படகில் கடத்தி வரப்பட்ட ரூ.600 கோடி மதிப்பிலான 86 கிலோ எடையுள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், படகில் பயணித்த பாகிஸ்தானை சேர்ந்த 14 பேரை கடலோர காவல் படை வீரர்கள் கைது செய்தனர்.