1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 2 நவம்பர் 2021 (19:20 IST)

கொரோனாவால் பாதித்தவர்கள் பட்டாசு வெடிக்கக்கூடாது: புது நிபந்தனை

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் பட்டாசு வெடிக்க கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தீபாவளி நேரத்தில் பட்டாசு புகை மண்டலத்தில் சிக்கிக்கொள்ளாமல் பாதுகாப்பாக இருப்பது அவசியம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
 
எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கபப்ட்டு சமீபத்தில் மீண்டவர்கள் தீபாவளி பட்டாசு வெடிப்பதை தவிர்ப்பது நல்லது என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நுரையீரல் பலவீனமாக இருக்கும் என்பதால் பட்டாசு புகை சூழ்ந்த பகுதியில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்