1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 15 நவம்பர் 2020 (15:35 IST)

பீகார் முதல்வராக நிதிஷ்குமார் தேர்வு: நாளை பதவியேற்பு!

நிதிஷ்குமார் மீண்டும் பீகார் முதல்வராக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
 
பீகார் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தள கூட்டணி வெற்றி பெற்றது என்பதும் அந்தக் கூட்டணி 125 தொகுதிகளில் வென்றது என்பதும் தெரிந்ததே. இந்நிலையில் பீகாரின் அடுத்த முதல்வர் நிதிஷ்குமார் தான் என ஏற்கனவே பாஜக தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
ஆனால், முதல்வர் பதவியை தான் கோரவில்லை என்றும் நிதிஷ்குமார் ஏற்கனவே கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனிடையே இன்று பாட்னாவில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடத்தப்பட்ட ஆலோசனையின் முடிவில் நிதிஷ்குமார் மீண்டும் பீகார் முதல்வராக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
 
இதனைத்தொடர்ந்து நாளை காலை 11 மணிக்கு நிதிஷ்குமார் முதல்வராக பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.