1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : செவ்வாய், 31 டிசம்பர் 2019 (17:56 IST)

நெல்லை கண்ணன் மருத்துவமனையில் அனுமதி..

பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா உள்ளிட்டோர் மீது அவதூறு பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நெல்லை கண்ணன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து நெல்லையில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பேசிய நெல்லை கண்ணன் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா குறித்து சர்ச்சையாக பேசினார். இதனை தொடர்ந்து நெல்லை கண்ணன் மீது, பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா குறித்து அவதூறு பரப்பியதாக பாஜக சார்பில் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து நெல்லை கண்ணன் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நெல்லை கண்ணன் உடல் நலக்குறைவு காரணமாக வண்ணாரப்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளார்.

இதனை தொடர்ந்து நெல்லை கண்ணனை அரசு மருத்துவமனைக்கு மாற்றும்படி பாஜக மற்றும் இந்து முண்ணனியினர் தர்ணாவில் ஈடுபட்டனர். அதன் பின்பு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு நெல்லை கண்ணன் மாற்றப்பட்டார்.