தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் நீட் தேர்வு ஒருபோதும் ரத்து செய்யப்படாது -அண்ணாமலை
- மணீஷ் சிசோடியாவுக்கு மேலும் 2 நாட்களுக்கு சிபிஐ காவல் நீட்டிப்பு- நீதிமன்றம் உத்தரவு
- யுபிஎஸ்சி தேர்வில் பெயில் ஆன ChatGPT .. 100க்கு 54 மதிப்பெண்கள் மட்டுமே!
- மாணவர்கள் சென்ற சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்து... 40 பேர் காயம்
- 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகள் இன்று வெளியீடு..
நீட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!
இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு மே 7ஆம் தேதி நடைபெற உள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ள நிலையில் இந்த தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு இன்று முதல் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின் https://neet.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தமிழகம் உள்பட இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது என்பதும் இதன் அடிப்படையில் தான் எம்பிபிஎஸ் என்ற மருத்துவ படிப்பிற்கு மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள் என்பதும் தெரிந்ததே.
நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் கூறி வந்தாலும் நீட் தேர்வு என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று முதல் நீட் தேர்வுக்கான விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் விண்ணப்பம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
