வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: வியாழன், 4 ஜூன் 2020 (23:43 IST)

தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆய்வுகள் முடிந்து அக்டோபர் மாதம் முதல் மனிதர்கள் மீது பரிசோதனை...

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,16,919 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 6,075 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 1,04,107 ஆக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் 25,872  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆய்வுகள் முடிந்து அக்டோபர் மாதம் முதல்  மனிதர்கள் மீது பரிசோதனை செய்யப்படும், என இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது