வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 19 மே 2020 (14:24 IST)

அம்மா உணவகங்களில் இலவச உணவுக்கு மூடுவிழாவா..?

பொதுமுடக்கம் முடியும் வரை இலவச உணவு வழங்கப்படும் என தகவல். 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வுகளுடன் அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமலில் உள்ளதால் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டுள்ளது. 
 
சென்னையில் கொரோனா பாதிப்பு 7,000-த்தை தாண்டியுள்ளதால், இங்கு எந்த தளர்வுகளும் அளிக்கப்படவில்லை. இந்நிலையில், ஊஅரடங்கு நீட்டித்துக்கொண்டே போவதால் அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கல் நிறுத்தப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுவதாக தகவல் வெளியாகியது. 
 
இதனைத்தொடர்ந்து பொதுமுடக்கம் முடியும் வரை இலவச உணவு வழங்கப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். ஆம், சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும்  மே 31 வரை இலவச உணவு தொடர்ந்து வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.