1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 16 ஏப்ரல் 2023 (14:59 IST)

கடும் வெயில் எதிரொலியால் ஒரு வாரம் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை: முதல்வர் அறிவிப்பு..!

மேற்குவங்க மாநிலத்தில் கடும் வெயில் கொளுத்தி வரும் நிலையில் அங்குள்ள பள்ளி கல்லூரிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கடுமையான வெயில் அடித்து வருகிறது என்பதும் நாடு முழுவதும் வறண்ட வானிலை நிலவி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் கடும் வெயில் மற்றும் வெப்பம் நிலவி வருவதால் பள்ளி கல்லூரிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள அறிவிப்பில் வரும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை கல்வி நிலை உங்களுக்கு விடுமுறை என்று அறிவித்துள்ளார். இதனை அடுத்து பள்ளி கல்லூரி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Edited by Siva