1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Lokmanya Tilak Express derail

பனி மூட்டத்தால் தடம்புரண்ட ரயில்..

லோக்மானியா திலக் எக்ஸ்பிரஸ்
ஒடிசாவில் பனிமூட்டம் காரணமாக இரு ரயில்கள் மோதி தடம்புரண்டதில் 25 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டம் சாலாகோன்-நெற்குந்தி ரயில் நிலையங்களுக்கு இடையே, சரக்கு ரயில் மீது லோக் மானியா திலக் எக்ஸ்பிரஸ் மோதியதில், 8 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று காலை 7 மணியளவில் இவ்விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. பனிமூட்டம் காரணமாக சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியிருக்கலாம் என கூறப்படுகிறது.
About Writer
Arun Prasath
அடுத்த கட்டுரையில்
முகேஷ் சிங் கருணை மனு; நிராகரித்த டெல்லி ஆளுநர்