1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 26 ஏப்ரல் 2021 (16:07 IST)

கார்நாடகாவில் மீண்டும் பொதுமுடக்கம்!

கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.
 
குறிப்பாக மஹாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகம், தமிழகம் உள்ளிட்ட மாநிலத்தில் இந்த தொற்றின் தீவிரம் அதிகரித்து வருகிறது. இதைத்தடுக்க மத்திய அரசுமாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
 
அதன்படி தமிழகத்தில் இரவு நேர முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளனர். 
 
இந்நிலையில் தற்போது கர்நாடகாவில் நாளுக்கு நாள் தொற்றின் வேகம் அதிகரித்து வருவதால் அம்மாநிலம் முழுவதும் அடுத்த 14 நாட்களுக்கு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுள்ளது. எனவே நாளை இரவு முதல் பொது முடக்கம் அமலுக்கு வரும் என முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.