1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 30 ஜூன் 2018 (18:08 IST)

காவிரி ஆணையத்தை எதிர்த்து போராட்டம்? குமாரசாமி அதிரடி!

நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும், இன்னும் காவிரி ஆணையம் அமைக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வரவில்லை. காவிரி வாரிய தலைவர் அறிவிக்கப்பட்டு, தமிழக உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்ட பின்பும், கர்நாடக அரசு தனது தரப்பு உறுப்பினர்களை அறிவிக்காமல் இருந்தது.  
 
ஆனால், கர்நாடக மாநிலத்தில் பெய்த அதிக மழையால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், கர்நாடக அரசு தங்களது பிரதிநிதியை அமைக்காத காரணத்தால் பொருத்திருந்த மத்திய அரசு, காவிரி ஆணையத்தின் கர்நாடக பிரதிநிதியை நியமித்தது. 
 
ஆனால், இதற்கு குமாரசாமி கண்டனம் தெரிவித்தார். மேலும், காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது எனவும் கருத்து தெரிவித்தார். மேலும், ஜூலை 2 ஆம் தேதி காவிரி ஆணையத்தின் முதல் கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில், இன்று கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்ட விதத்திற்கு பாஜக உட்பட அனைத்து கட்சிகள் சார்பிலும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. 
 
எனவே, நாடாளுமன்ற விவாதம் நடத்திதான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும், இதனை கர்நாடக அனைத்து கட்சிகள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி இணைந்து செயல்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. மேலும், காவிரி மேலாண்மை ஆணையத்தை தவிர்ப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.