கர்நாடக முதலமைச்சராக மதசார்பற்ற ஜனதா தளக் கட்சியின் தலைவர் குமாரசாமி பெரும் போராட்டத்திற்கு பிறகு காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து பதவியேற்றார். இந்நிலையில், தற்போது கர்நாடக மாநிலத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் குமாராசாமி. இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் பேசியது பின்வருமாறு, நான் கடவுள் அருளால் முதல் மந்திரி ஆகி இருக்கிறேன். அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறேன். ஆனால்...