வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 11 அக்டோபர் 2019 (12:46 IST)

ஒருதலைக் காதல் – ஒத்துக்கொள்ளாத பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞர் !

கேரளாவைச் சேர்ந்த நிதின் என்ற இளைஞர் தன்னைக் காதலிக்க மறுத்த பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் கேரளாவில் பீதியைக் கிளப்பியுள்ளது.

கேரளாவின் எர்ணாகுளம் பகுதியில் நிதின் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அருகாமையில் உள்ள காக்கநாடு எனும் பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவரை ஒருதலை பட்சமாகக் காதலித்து வந்துள்ளார். அவரிடம் பலமுறை இது பற்றி பேசியுள்ளதாகவும் ஆனால் அந்த பெண் அதை ஒரு பொருட்டாக கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் விரக்தியடைந்த நிதின் அந்த பெண்ணைக் கொலை செய்ய திட்டமிட்டு அவரது வீட்டருகே சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த பெண்ணின் மீது பெட்ரோலை ஊற்றி கொளுத்தியுள்ளார். பின்னர் தானும் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திக் கொண்டுள்ளார். இதையடுத்து அந்த பெண்ணை காப்பாற்றிய அவரது பெற்றோர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அந்த பெண் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.