வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 8 அக்டோபர் 2019 (07:56 IST)

சாப்பிட மறுத்த 4 வயது குழந்தை… கோபத்தில் அடித்த தாய் – சுருண்டு விழுந்த குழந்தை மரணம் !

கேரளாவின் கொல்லம் பகுதியில் சாப்பிட மறுத்த குழந்தையை தாய் அடிக்க எதிர்பாராத விதமாக குழந்தை உயிர் இறந்த சம்பவம் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

கேரளாவின் கொல்லம் பகுதியைச் சேர்ந்த செவிலியராக வேலைப் பார்த்த அந்த பெண், தனது குழந்தை மற்றும் கணவரோடு வசித்து வருகிறார். இந்நிலையில் அந்த பெண்ணின் குழந்தைக்கு சில வாரங்களுக்கு முன்னர் நிமோனியா காய்ச்சல் வந்து, அதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட குழந்தை சாப்பிடாமல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் குழந்தைக்கு சாப்பாடு ஊட்ட முயற்சித்த தாய் சாப்பிட மறுத்ததால் கோபத்தில் குழந்தையை அடித்துள்ளார்.

இதனால் குழந்தை மயங்கி விழுந்துள்ளது. இதைப்பார்த்த உறவினர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு குழந்தையைத் தூக்கி செல்ல குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர் மருத்துவர்கள். இதையடுத்து உறவினர்கள் தாய் மேல் புகாரளிக்க போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.