செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 29 அக்டோபர் 2022 (19:26 IST)

காதலி கொடுத்த ஜூலை குடித்த காதலனுக்கு விபரீதம்

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை  அருகே காதலி கொடுத்த ஜூஸை குடித்த காதலன் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மா  நிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர்  பாற்சாலையில் வசித்து வந்தவர்  ஜெயராமன். இவரது மகன் ஷாரோன் ராஜ்(23). இவர் அங்குள்ள கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

வஇவர், ராமவர்மன் என்ற பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், அப்பெண்ணுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனாலும், அப்பெண் ஷாரோன் ராஜை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில்  கடந்த 14 ஆம் தேதி அப்பெண் ஷாரோன் ராஜை தன் வீட்டிற்கு அழைத்துள்ளார்.

அங்கு அப்பெண்ணின் பெற்றோர் வீட்டில் இல்லை; ஷாரோன் ராஜுற்கு  ஜூஸ் கொடுத்துள்ளார் அப்பெண். அதைக் குடித்துவிட்டு, வீட்டிற்கு வெளியே வந்ததும் வாந்தி எடுத்துள்ளார்.

இதுகுறித்து,  அவர் நண்பர் கேட்டதற்குத் தனக்கு ஜூஸ் ஒத்துக் கொள்ளவில்லை எனக் கூறவே, வீட்டிற்குச் சென்றதும்  உடல் நிலை மோசமாகவே அரசு மருத்துவமனையில் அவரை சேர்த்தனர்.  ஆனால் சிகிச்சை பலனின்றி, கடந்த 15 ஆம் தேதி  ஷாரோன்ராஜ் உயிரிழந்தார்.

இதுகுறித்து, போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Edited by Sinoj