1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: திங்கள், 5 ஜூன் 2017 (06:39 IST)

ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட்: இன்று மாலை விண்ணில் பாய்கிறது

இந்தியாவில் இந்திய விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட, அதிக எடை தாங்கும் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட்டை இஸ்ரோ நிறுவனம் இன்று இன்று மாலை 5 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான கவுண்ட் டவுண் நேற்று தொங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.



 


இந்த ராக்கெட் வெற்றிகரமான விண்ணில் பாய்ந்தால் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோவின் முயற்சிக்கு முதல்படி வெற்றி கிடைக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் விண்ணில் மனிதர்களை அனுப்பும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைய வாய்ப்பு உள்ளது.

இஸ்ரோவில் மைல்கல்லாக அமையப்போகும் இந்த ஜிசாட்-19 செயற்கைக்கோள் ஏழு செயற்கைக்கோள்களுக்கு சமமான திறன் கொண்டது என்றும் இதன் மூலம் தகவல் தொழில்நுட்பத்துறை சேவைகள் உயர்தரத்தில் மேம்படுத்தப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.