1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 15 ஜூன் 2019 (16:18 IST)

’சரக்கு’ வாங்கறதுக்கு இவ்ளோ நேரமா ? மனைவியை ’துடிதுடிக்க ’கொன்ற கணவன்!

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அம்ரா மாவட்டத்திற்கு அருகே உள்ள அம்ரூட் என்ற பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் புர்வியா( 30). இவரது மனைவி சந்தோஷி (25). நேற்று பகல் வேளையில் அதிகமாகக் மதுகுடித்துவிட்டி வீட்டுக்கு வெளியில் தள்ளாடியபடி இருந்துள்ளார்.
இதனையடுத்து தனது மனைவியை அழைத்து தனக்கு சரக்கு வாங்கிவருமாறு மதுபான கடைக்கு அனுபியுள்ளான். சந்தோஷி கடைக்குச் சென்றுவிட்டு திரும்பி வருவதற்கு தாமதமானதாகத் தெரிகிறது.
 
இதனால் கோபம் அடைந்த பிரவீன், சந்தோஷி வீட்டுக்குள் நுழைந்ததும் தன் வீட்டில் இருந்த மரக்கட்டையை எடுத்து மனைவியை தாக்கியுள்ளார். 
 
இதில், படுகாயம் அடைந்த சந்தோஷி சம்பவ இடத்திலேயே கீழே  தரையில் விழுந்து துடிதுடித்து இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்துவந்த போலீசார் சந்தோஷியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பின்னர் பிரவீனை,போலீஸார் கைது செய்தனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.