1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 10 நவம்பர் 2022 (17:23 IST)

சீன எல்லை வரை ரெயில் பாதை: இந்தியன் ரெயில்வே திட்டம்

railway
சீன எல்லை வரை வடகிழக்கு மாநிலங்களில் ரயில் பாதை அமைக்க இந்தியன் ரயில்வே திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
அருணாச்சலபிரதேசம் உள்பட ஒருசில மாநிலங்களில் சீன எல்லை வரை ரயில் பாதைகளை அமைக்க இந்தியன் ரயில்வே முடிவு செய்துள்ளது
 
ஏற்கனவே அண்டை நாடான பூடான் வரை ரயில் பாதைகளை அமைக்கும் பணியில் இந்தியன் ரயில்வே ஈடுபட்டு வரும் நிலையில் வடகிழக்கு எல்லையான அருணாச்சலப்பிரதேசம் உள்பட ஒரு சில பகுதிகளில் புதிய ரயில் பாதைகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது 
 
சீன எல்லையை ஒட்டியுள்ள பாலுக்போங், தவாங், சிலபத்தர் ஆகிய பகுதி வரை ரயில் பாதை அமைக்க இருப்பதாகவும் சீன எல்லைப் பிரச்சனையை கருத்தில் கொண்டு இந்த பாதைக்கு முக்கியத்துவம் தர இந்தியன் ரயில்வே முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
சீன எல்லை வரை ரயில் பாதை அமைக்க இருக்கும் இந்திய ரயில்வேயில் முடிவுக்கு சீனா எப்படி ரியாக்ட் செய்யும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
Edited by Mahendran