1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 17 டிசம்பர் 2021 (12:54 IST)

டெல்லியில் மேலும் 10 ஒமிக்ரான் பாதிப்பு! – 100 பாதிப்பை நோக்கி இந்தியா!

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் டெல்லியில் 10 பேருக்கு ஒமிக்ரான் உறுதியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளை தொடர்ந்து தற்போது ஒமிக்ரான் பாதிப்பு பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்தியாவிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. டெல்லியில் ஒரே நாளில் 10 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் டெல்லியில் மொத்த ஒமிக்ரான் பாதிப்பு 20 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 90 ஆக உயர்ந்துள்ளது.