1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 17 மார்ச் 2022 (09:38 IST)

156 நாடுகளுக்கு சுற்றுலா இ-விசாக்களுக்கான தடை நீக்கம்! – இந்திய அரசு அறிவிப்பு!

இந்தியர்களுக்கு மற்ற நாடுகளுக்கு செல்ல வழங்கப்படும் நீண்ட கால வேலிடிட்டி கொண்ட சுற்றுலா இ-விசாக்களுக்கான தடை நீக்கப்பட்டுள்ளது.

இந்திய மக்களுக்கு இந்திய அரசால் 156 நாடுகளுக்கு 5 ஆண்டு காலம் செல்லுபடியாகக் கூடிய சுற்றுலா இ-விசா வழங்கப்பட்டு வந்தது. கடந்த மார்ச் 2020ம் ஆண்டு கொரோனா காரணமாக இந்த சேவைகள் நிறுத்தப்பட்டது. தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சுற்றுலா இ-விசாக்களுக்கான தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கப்படும் 10 ஆண்டு காலம் செல்லுபடியாகக் கூடிய சுற்றுலா இ-விசாவுக்கான தடையும் நீக்கப்பட்டுள்ளது.